கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
" alt="" aria-hidden="true" />
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கிலும் கள்ளகுறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ரேவதி தலைமையில் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வெங்கடேசன் , செல்வம் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கல்வராயன்மலை பகுதியில் இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர்*இந்த சோதனையில் தொரடிபட்டு, தாழ்பாச்சேரி , விளாம்பட்டி கரு நெல்லி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாராயம் காய்க்சுவதற்காக கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லம் மற்றும் விற்பனைக்காக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 440 லிட்டர் எரிசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிசள் 6 பேரை கைது செய்தனர்